எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் அரசு? - தற்காலிக நடத்துனர், ஓட்டுனர்களுக்கு அழைப்பு
போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், தற்காலிகமாக பேருந்துகளை இயக்குவதற்காக ஆட்சேர்ப்பில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
Recommended Video

திருச்சி: அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போக்குவரத்து கழகம் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களை நியமனம் செய்து வருகிறது.
ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கியது.

சென்னையில் நேற்று 13-வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இழுபறி நீடித்தது.
இதன் காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பேருந்துகளை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். இதனைத்தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தேவை என விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை மேலும் எரிச்சலடைய செய்துள்ளது.
இதுகுறித்து கவலைப்படாத போக்குவரத்து கழகம், தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்காலிக ஓட்டுனர்கள் எந்த அளவு பயிற்சி பெற்றவர்கள் என்று தெரியாத நிலையில் போக்குவரத்து கழகம் எங்களை ஒடுக்குவதாக நினைத்து பெரும் ஆபத்தான முடிவை எடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications