ஜி.எஸ்.டி. சந்தேகங்களை விளக்குவதற்கு தமிழக அரசு இன்று கருத்தரங்கம்
ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களை விளக்கும் கருத்தரங்கை தமிழக அரசு இன்று சென்னையில் நடத்துகிறது.
சென்னை: நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட உள்ள நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கருத்தரங்கை இன்று நடத்துகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் (ஜி.எஸ்.டி.) நாடு முழுவதும் ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், அனைத்து வணிக பெருமக்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசின் வணிகவரித்துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கம் இன்று மாலை 4 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கிறது. கருத்தரங்கை நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கிவைத்து பேசுகிறார்.
வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றுகிறார். கருத்தரங்கில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி குறித்த சிறப்பம்சங்கள் மற்றும் சுங்கவரி சட்டத்தின் கீழ் உள்ள திருத்தங்கள் ஆகியவை வணிகர்களுக்கு காணொலி விளக்கவுரை மூலம் எடுத்துரைக்கப்பட உள்ளது.
எனவே, வணிகப்பெருமக்கள் அதிகளஅவில் கலந்துகொண்டு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் குறித்த விளக்கங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications