அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி எதற்கு?.... நான் இருக்கேன்ல... சொல்வது ஹெச். ராஜா
தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி எதற்கு? நானே அந்த இடத்தை நிரப்புவேன் என்று பாஜகவின் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினிகாந்த் எதற்கு நானே அந்த இடத்தை நிரப்புவேன் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பசுவதை தடுப்பு பிரிவு என்ற அமைப்பு மாடுகளுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று களத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்திலும் இப்போது பசு பாதுகாவலர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மணப்பாறையில் இருந்து, பழனி வழியாக பொள்ளாச்சி தேவனூர்புதூருக்கு 7 பசுங்கன்றுகளை ஏற்றி சென்ற வாகனத்தை, மன்னார்குடி வைஷ்ணவ மடத்தை சேர்ந்த செண்டலங்கார செண்பக ஜீயர் என்பவர், தடுத்து பழனி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதை அறிந்து பழனி காவல்நிலையத்தில் ஜீயருக்கு ஆதரவாக இந்து அமைப்பினரும், எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் குவிந்தனர். ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், காவல்நிலையத்தில் இருந்து ஜீயர் வெளியேறும்போது, அவர் சென்ற வாகனத்தின் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல மற்றொரு தரப்பினரும் சாலைமறியல் செய்தனர். இதைத் தொடர்ந்து பேருந்து மீது திடீரென கற்கள் வீசப்பட்டதால், கலவரத்தை கட்டுப்படுத்த அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் பலர் காயமடைந்தனர். இந்த கலவரத்தால் பழனி நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன பதற்றம் உருவானது.
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று பழநி வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் அரசு நிர்வாகம் கெட்டுவிட்டதைப் போல, நீதித்துறையும் கெட்டுவிட்டதா? என்று கேட்டார்.
Recommended Video

பழநி சம்பவத்தில் தடியடி நடத்திய காவல்துறை, ஆம்பூர் கலவரத்தில் ஏன் தடியடி நடத்தவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.
திடீரென என்ன யோசித்தாரோ, தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி எதற்கு? நானே அந்த இடத்தை நிரப்புவேன் என்றும் கருத்து கூறினார்.
தமிழக அரசியலில் நுழைய ரஜினிக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்று இதே ஹெச் ராஜாதான் கருத்து கூறினார். இப்போது இவரே ரஜினி எதற்கு என்று கேட்டுள்ளார்.
ஏதேது விட்டால் பாஜக ஆட்சியில் நான்தான் முதல்வர் என்று சொன்னாலும் சொல்வார் ராஜா என்று பேசிக்கொள்கின்றனர் பாஜக தொண்டர்கள். முதல்வர் ரேஸில் இப்போதே முந்திக்கொண்டார் ஹெச். ராஜா.
-
வேட்பாளரானார் திருமாவளவன்.. விசிக சார்பில் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? வருத்தப்பட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு












Click it and Unblock the Notifications