கருணாநிதியை சந்தித்ததில் பெரும் "மகிழ்ச்சி".... நேரில் சந்தித்த பின் ராகுல் காந்தி
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் கருணாநிதியின் உடல்நிலை சரியாகி வருவதாகவும் அவர் கூறினார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி நேற்று நடைபெற்ற அவரது வைரவிழாவில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் பலர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக சென்னையில் தங்கியிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாநிதியை நேரில் சந்தித்தார். அப்போது கருணாநிதிக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.

நேரில் சந்தித்தது மகிழ்ச்சி
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை நேரில் தெரிவித்தது பெருமையாக உள்ளது என்றார்

மீண்டும் வரவேண்டும்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்த்து செய்தியையும் அவரிடம் தெரிவித்தேன். அவரது உடல் நலம் தேறி வருவது சந்தோசமாக இருக்கிறது. மீண்டும் அவர் 100 சதவீத உடல் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் தவறான அணுகுமுறை
மேலும் காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு தவறான அணுகு முறையை கையாண்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு பல்வேறு சோதனைகளை நடத்துகிறது என்றும் அவர் கூறினார். காஷ்மீரில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதம் சரியான அணுகு முறை அல்ல என்றும ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

அமைச்சரிடம் எச்சரித்தும்..
மேலும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் பேசி இருந்தேன்.
ஆனாலும் அவர்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் அவர்கள் எடுத்து வரும் முடிவுகள் தவறாக உள்ளது.

வலிமை மிக்க மாநிலம்
காஷ்மீர் இந்தியாவின் வலிமைமிக்க மாநிலமாகும். அங்கு எடுக்கும் முடிவுகள் காஷ்மீருக்கு வலிமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி கூறினார்.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!











Click it and Unblock the Notifications