மனிதர்கள் வாழத் தகுந்த இடமா தனுஷ்கோடி? நீதிபதிகள் குழு ஆய்வு
கடலால் அழிந்த தனுஷ்கோடி மனிதர்கள் வாழ தகுந்த இடம்தானா? என்பது குறித்து நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
ராமேஸ்வரம்: கடலால் அழிந்த தனுஷ்கோடி மனிதர்கள் வாழ தகுந்த இடம்தானா? என்பதை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆய்வு செய்தனர்.
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி, தனுஷ்கோடியை பயங்கர புயல் தாக்கியது. இதில் 1,500 பேர் பலியானார்கள்.
ராமேஸ்வரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது. கடல் அலையும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பொங்கி எழுந்ததில் தனுஷ்கோடி நகரம் மூழ்கி சின்னாபின்னமானது.

அழிந்த தனுஷ்கோடி
தனுஷ்கோடியில் ரயில் நிலையம், கோயில், வீடு, கடைகள் என அனைத்தையும் கடல் காவு கொண்டது. இதனால் அந்த இடம் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டது.

வாழ தகுதியான இடமா?
இந்நிலையில் தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகளை செய்தால் அந்த இடம் வாழ தகுதியான இடமா? என்று வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தனுஷ்கோடி வாழத் தகுந்த இடமா? என நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.

பாம்பன் பாலத்திலும் ஆய்வு
இதையடுத்து பாம்பன் பாலத்தில் முதலில் நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பாம்பன் பாலத்தில் கடந்த ஆண்டு போடப்பட்ட ரப்பர் சாலை பெயர்ந்தது.

100-வது விபத்து
இதனால் ஏராளமான விபத்துகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பாலத்தில் 100-ஆவது விபத்து நடந்தது. அப்போது பொதுமக்கள் கேக் வெட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தற்போது பாம்பன் பாலம் போக்குவரத்துக்கு உகந்ததா எனவும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்,

தனுஷ்கோடி
இதையடுத்து தனுஷ்கோடிக்கு நீதிபதிகள் சென்றனர். அந்த இடம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியான இடம்தானா? என அவர்கள் ஆய்வு செய்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications