ஆட்டோ கட்டண நிர்ணயம்: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தாமதம் ஏன்… தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கண்டனம்
சென்னை: சட்டத்தை அமல்படுத்துபவர்கள் ஆட்டோக்களின் உரிமையாளர்களாக இருப்பதால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தமிழக அரசு காலதாமதம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் லோகநாதன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆட்டோ மீட்டர் தொடர்பான நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்த தமிழக அரசு 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய முடியாது என்றும் 2 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும் என்றும் கூறியிருந்தது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் அனைத்து கோரிக்கைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநராயணன் அமர்வு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது.
அப்போது சட்டத்தை அமல்படுத்துபவர்கள் ஆட்டோக்களின் உரிமையாளர்களாக இருப்பதால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற காலதாமதம் செய்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து விரிவான அறிக்கையை அக்டோபர் 8ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications