விடிய விடிய கனமழை: சென்னை, காஞ்சி, திருவள்ளூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழையால் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் நேற்று பகலில் வானம் தெளிவாக இருந்தது. மாலை நேரம் நெருங்க நெருங்க அப்படியே தலைகீழானது.

ராயபுரம், பெரம்பூர் என வடசென்னையில் வெளுத்துக் கட்டிய கனமழை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராமாவரம் என பல இடங்களில் கொட்டியது. அதேபோல் புறநகர்களில் தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களிலும் கனமழை இடைவிடாது கொட்டியது.

விடிய விடிய சென்னை மற்றும் புறநகர்களில் கொட்டிய கனமழையால் மழைநீர் பல இடங்களில் மீண்டும் தேங்கியது. தற்போதும் பல இடங்களில் மழை நீடித்து வருகிறது.
இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications