மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று.. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வழக்கத்திற்கு மாறாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகவே பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. தற்போது அது அதிகரித்து சுமார் 60 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.
பலத்த காற்று காரணமாக பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கான மீன் பிடி அனுமதியை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். இதனால் பாம்பன் பகுதியில் சுமார் விசைப்படகுகளை பயன்படுத்தி, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இயலவில்லை.
எச்சரிக்கை மற்றும் தடை காரணமாக கடலுக்கு செல்ல முடியாததால், பாம்பன் பகுதியில், சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளும், கடற்கரையோரங்களில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் 5,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் 10,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கிலான வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நேற்றும் வீசிய பலத்த காற்றால் சிக்னல் கோளாறு காரணமாக பாம்பன் பாலம் அருகே ரயில்கள் நிறுத்தப்பட்டு வழக்கத்தைவிட மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications