ஆர்.கே. நகரில் போட்டியிடக் கூடாது.. கூலிப்படை மூலம் மிரட்டல்'.. தியானம் இருந்த தீபா குற்றச்சாட்டு
ஆர்.கே. நகரில் போட்டியிடக் கூடாது என்று கூலிப்படை மூலம் மிரட்டல்விடப்படுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: திடீர் அரசியலில் குதித்த ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவிற்கு கூலிப்படை மூலம் மிரட்டல் விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. ஜெயலலிதா மறைந்ததால் காலியான இந்த இடத்தில் அவரது அண்ணன் மகள் தீபா அறிவித்தார்.
இந்நிலையில், திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா திடீரென ஓபிஎஸ் பாணியில் தியானத்தில் ஈடுபட்டார். அப்போது உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை ஜெயலலிதா நினைவிடம் முன்பு வைத்து தியானம் செய்தார்.

கூலிப்படை மிரட்டல்
பின்னர், செய்தியாளர்களிடம் தீபா பேசியதாவது: நான் ஆர்.கே. நகரில் போட்டியிடப் போவதாக அறிவித்ததில் இருந்து என்னை கூலிப்படை மூலம் மிரட்டுகின்றனர். பல சதிகளை தீட்டி வருகின்றனர். சொந்த அண்ணனின் மகளான என் மீது எனது அத்தை எனக்கு பெயரிட்டு குழந்தையைப் போல் பராமரித்து வந்தார். எனக்கும் அவருக்கும் ஒரு தாய்க்கும் மகளுக்குமான நெருக்கமும் பாசமும் பந்தமும் உள்ளது.

விரைவில் உண்மை வெளியே…
இவர் யார் அதை குறை கூறுவதற்கு அல்லது இவருக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது. இதெல்லாம் போதாதென்று அரசியல் சாயமும் பூசுகின்றனர். இவர்களுக்கு நல்ல பதிலை தமிழக மக்கள் வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நான் இங்கே வந்தேன். இவர்களைப் பற்றிய பல உண்மைகளை வெளியே வரும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

அச்சம் இல்லை..
யாரும் எனக்கு நேரடியாக எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் மறைமுகமாகவே தொல்லை கொடுத்து வருகின்றனர். எனக்கு பாதுகாப்பை கொடுக்க வேண்டிய அளவிற்கு எந்த அச்சமும் இல்லை. ஆனால், இவர்களைப் பற்றி நிச்சயமாக வெளியே தெரிவிக்க வேண்டும்.

சசிகலா முதல்வரா..
நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் டிடிவி தினகரன், சசிகலாதான் முதல்வர் பதவிக்கு உரியவர் என்று சொல்கிறார். இவரை எப்படி முதல்வராக தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். முதலில் போட்டியிட்டு பிறகு முதல்வராக அப்போதாவது அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்று தீபா கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications