பேரவையை கலைக்கவில்லை.. ஆர்.கே.நகரில் போட்டியிடுவது உறுதி.. ஜெ. தீபா அதிரடி!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை கலைக்கவில்லை என்றும் தீபா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் சசிகலா. அவரது தலைமையை ஏற்க விரும்பாத பல தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தினர்.

இதையடுத்து அரசியலில் இறங்கினார் தீபா. ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்தார்.
இதனிடையே தீபாவின் கணவர் மாதவன், திடீரென தீபாவின் பேரவையில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று வணங்கிய அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தீபா. அப்போது அவர் கூறுகையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை கலைக்கவில்லை. தவறான செய்தியை பரப்பி அவதூறு கிளப்புகிறார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்க மிகப்பெரிய சதி நடக்கிறது. இருப்பினும் இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன்.
என் மீது நம்பிக்கை இருப்பவர்கள் ஆதரிக்கிறார்கள். என்னை அரசியலில் இருந்து விலக்க சதி நடைக்கிறது. என் கணவரின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பின்னால் இருந்து சிலர் இயக்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications