ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு தலையிட வலியுறுத்துவேன் - ஓ. பன்னீர்செல்வம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த டெல்லி செல்வதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவினால் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று நம்பிக்கையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க முடியாது என்று தை பொங்கலுக்கு முதல்நாள் கூறிவிட்டது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கொஞ்சம், நஞ்சமிருந்த நம்பிக்கையும் உடைந்து போகவே இளைஞர்கள் கடந்த சில தினங்களாக போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
இதனிடையே சென்னை மெரீனாவில் கடந்த 48 மணிநேரமாக இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் வாக்குறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.

ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை
இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டார். அதில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் இளைஞர்கள் அதனை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

முதல்வர் பேச்சுவார்த்தை
போராட்டக்குழுவினர்கள் சிலரை அழைத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். முதல்வரின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தை நடத்த இளைஞர்கள் குழுவினர் அவரது இல்லம் சென்றனர். முதல்வர் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது போராட்டக்குழுவினர் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியதாக தெரிகிறது.

முதல்வர் பேட்டி
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பிரதமரை சந்திக்க டெல்லிக்கு கிளம்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக மக்களின் பாரம்பரிய உணர்வுகளை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளேன் என்று தெரிவித்தார்.

பிரதமரிடம் பேசுவேன்
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்போது பிரதமரை வலியுறுத்துவேன் என்றார். போராட்டக்குழுவினர் சிலர் நேரில் சந்தித்து பேசினார்கள். நான் கூறியதை கேட்டு திருப்தியுடன் சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தார். தமிழகத்துக்கு தேவையான வறட்சி நிவாரணத் தொகையை பிரதமரிடம் கேட்க உள்ளேன். அப்போது ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைப் பற்றியும் எடுத்துக்கூறுவேன் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சுமூக உறவு
மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சுமூக உறவு இருக்க வேண்டும் என்பதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கருத்து என்று தெரிவித்தார். மத்திய அரசிடம் போராடியும், வாதாடியும் உரிமைகளை பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications