முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க.. தேவைப்பட்டால் ஆளுரை சந்திப்பேன்.. ஓபிஎஸ் திட்டம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி மீது வழக்கு பதிய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
தூத்துக்குடி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது அதிமுக சார்பில் பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றது. இதனால் தேர்தலையே தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இந்நிலையில், வழக்கறிஞர் வைரக்கண்ணன் தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற்றுள்ளார்.
அதில், ஏப்ரல் 18ம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஸ்டாலின் கண்டனம்
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக பேசியுள்ளார். காவல்துறை வழக்கு பதியப்படவில்லை என்றால் திமுகவே வழக்கு பதியும் என அவர் கூறியுள்ளார்.

தவறு செய்தால் தண்டனை
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து ஓபிஎஸ், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்று பதில் அளித்தார்.

ஆளுநரை சந்திப்பேன்
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுக அம்மா கட்சி எம்பி தம்பிதுரை போன்று தானும் தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

எங்கள் பக்கம் தொண்டர்கள்
அதிமுகவை பொறுத்தவரை அனைத்து தொண்டர்களும் தங்கள் அணி பக்கமே இருப்பதாக ஓபிஎஸ் கூறினார். எனவே, உறுதியோடு தங்கள் அணி செயல்பட்டு வருவதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications