திட்டமிட்டு செயல்பட்டால் தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
கோவை : தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டால் மதுவிலக்கை வெற்றிகரமாக அமல்படுத்த முடியும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளர்.
காந்தியவாதி சசிபெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் செல்வதற்காக கோவைக்கு இன்று (சனிக்கிழமை) விமானம் மூலம் வந்தார்.
அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது...

மதுவிலக்கை அமல்படுத்தப் போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. செல்போன் கோபுரம் மீது அவர் ஏறியதுமே காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் அவரது உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். இந்த விவகாரத்தில், அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சசிபெருமாளின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சிக் கொடி 3 நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கும். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமானது தான்.
ஏனெனில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மதுவிலக்கு அமலில் இருந்தது. இப்போதும் மாநில அரசு சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட்டால் மதுவிலக்கை அமல்படுத்த முடியும்.
காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டை சீர்குலைக்கும் வகையில், சிலரின் தூண்டுதலின் பேரில் நடந்து கொண்டதால்தான் சேலம், தருமபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்தார்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications