சிதம்பரத்தில் விசிக தலைவர்.. திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு.. பரபரப்பு
சிதம்பரம்: சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 45 நிமிடங்கள் சோதனை நடைபெற்றது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரம் கூட இல்லை. சரியாக சொல்வது என்றால் 10 நாட்களே உள்ளது. இதனால், தேர்தல் களம் அனல் உச்ச கட்ட அனல் பறக்கிறது. அரசியல் கட்சிகள் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மற்றொரு பக்கம் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் பக்காவாக செய்து வருகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடாவாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆங்கேங்க திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திவுமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சிதம்பரம் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வரும் திருமாவளவன், தனது கட்சியின் நிர்வாகி முருகானந்தம் என்பவரது வீட்டில் தங்கியிருக்கிறார். சிதம்பரம் தொகுதியில் உள்ள சி. தண்டீஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட நடேசன் நகர் பகுதியில் இந்த வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் தங்கியிருந்தபடி திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், திருமாவளவன் பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்ற நிலையில், அவர் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடங்கள் சோதனை நடைபெற்ற நிலையில், எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லபப்டுகிறது. திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய தகவல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. சிதம்பரத்தில் தொல் திருமாவளவனும் விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகிறார்கள். பானை சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.
-
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
விசிக திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்? -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications