இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கை முடி திருட்டு.. ரூ.1 கோடி மதிப்பு
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய முடி திருடி செல்லப்பட்டுள்ளது. சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த இந்த முடியின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது இருக்கன்குடி, மாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, சென்னை, கோவை உள்ளிட்ட தொலை தூர பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பக்தர்களில் பெரும்பாலான குடும்பத்தார், தங்களின், வாரிசுகளுக்கு இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வைத்து முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். பெரியவர்களுக்கும், நேர்த்தி கடனாக, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வைத்து முடி காணிக்கை செலுத்துவார்கள்.
இப்படி சேகரிக்கப்படும், பக்தர்களின் காணிக்கை முடி, பிறகு ஏலத்தில் விடப்படும். இதேபோல ஏலத்தில் விடுவதற்காக பல மூட்டைகளில் முடி சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த பக்தர்களின் முடி திருடுபோயுள்ளதாக இன்று தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான முடியின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி என்று கோவில் நிர்வாக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் பரபரப்ப ஏற்பட்டுள்ளது. இந்த காணிக்கை முடியை, திருடிச் சென்றவர்கள் யாரிடம் அதை விற்பனை செய்ய கூடும் என்பதை யூகித்து அங்கெல்லாம் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications