தமிழக அரசை நடத்துவது ஜெயலலிதாதான்: சட்டசபையில் பதிவு செய்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்த ஜெயலலிதாதான், தமிழக அரசை தொடர்ந்தும் நடத்தி வருவதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் பதிவு செய்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சட்டசபை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியும் பறிபோனது.
பின்னர் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். இருந்த போதும் தொடர்ந்தும் அதிமுகவினர் "மக்கள் முதல்வர்" ஜெயலலிதா என்றுதான் கூறி வருகின்றனர்.

இதனையே தமிழக சட்டசபையில் முதல்வர் பன்னீர்செல்வமும் "மக்களின் முதல்வர் ஜெயலலிதா" என்றே கூறியிருக்கிறார். இது சட்டசபை குறிப்புகளிலும் பதிவாகி இருக்கிறது.
குறிப்பாக சட்டசபையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாக மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. சவுந்திரராஜன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இந்த அரசாங்கம் தொடக்கம் முதலே ஜெயலலிதாவின் தலைமையின் கீழ்தான் நடைபெறுகிறது. நல்லாட்சிக்கான சிறப்பான உதாரணத்துடன் இந்த அரசு இயங்குகிறது என்றும் கூறியிருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று எம்.எல்.ஏ. பதவியை இழந்த ஜெயலலிதாவின் தலைமையின் கீழே தமது அரசு இயங்குகிறது என்று முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications