ஜாட் இனத்தவர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஒருவர் பலி: 144 தடை உத்தரவு அமல் !
ஹரியாணா: ஹரியாணா மாநிலம் ரோட்டக் பகுதியில் ஜாட் இனத்தவர் நடத்திய போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிழவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ரோட்டக் பகுதியில் நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.

அப்போது ஏராளமான வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ரோதக், ஜிந்த், பிவானி, சோனேபட் மற்றும் ஹிஸார் ஆகிய பகுதிகளில் வன்முறை பரவுவதை தடுக்க இணையதளம், செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகளை மாநில அரசு துண்டித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் சாலை, ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜாட் சமூகத்தை இதர பிறப்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஜாட் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications