அரசியல் வரலாற்றில் அதிமுக புதிய சாதனை.. 4 ராஜ்யசபா சீட்டுகளுமே நெல்லை, தூத்துக்குடிக்கு!
சென்னை: அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலி்ல் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களுமே நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா, லோக்சபா தேர்தலை மனதில் கொண்டே இந்த ராஜ்யசபா தேர்தலில் அதிரடியாக இந்த இரு மாவட்டங்களுக்கு மட்டும் சீட் கொடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் அதிமுக நான்கு இடங்களில் போட்டியிடவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை இன்று ஜெயலலிதா அறிவித்தார்.

நெல்லை- தூத்துக்குடி மேயர்கள்
இதில் இருவர் பெண்கள். அதில் விஜிலா சத்தியானந்த் நெல்லை மேயர் ஆவார். அதேபோல சசிகலா புஷ்பா தூத்துக்குடி மேயராவார்.

சசிகலா மாநில மகளிர் அணிச் செயலாளர்
சசிகலா அதிமுக மாநில மகளிர் அணிச் செயலாளராக இருக்கிறார். விஜிலா சத்தியானந்த் நெல்லை மாவட்ட மகளிர் அணிச் செயலாளராக இருக்கிறார்.

நெல்லை மா.செ. முத்துக்கருப்பன்
இதேபோல மற்ற இருவரில் ஒருவரான முத்துக்கருப்பன் நெல்லை மாவட்டஅதிமுக செயலாளராக இருப்பவர்.

தூத்துக்குடி சின்னையா
இன்னொருவரான சின்னையா, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் ஆவார். மேலும் இவர் அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெணக்ள் பாசறையின் இணைச் செயலாளராக இருக்கிறார்.

ஏன் இப்படி இரு மாவட்டங்களுக்கு மட்டும்...
இதுவரை தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நான்கு சீட்டுக்களையும் இரு மாவட்டங்களுக்கு மட்டும் வழங்கியிருக்கிறார் ஜெயலலிதா. இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் இப்படி மொத்த சீட்டுக்களையும் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு யாருமே வழங்கியதில்லை.

நான்கு சாதி... ஒரு தேர்தல்.. தொலைநோக்குப் பார்வை
ஆனால் இந்த நான்கு பேரையும் இரு மாவட்டங்களிலிருந்து முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்ததற்கு லோக்சபா தேர்தல் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதாவது இந்த நான்கு வேட்பாளர்களுமே நான்கு சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த நான்கு சாதியுமே இந்த இரு மாவட்டங்களிலும் முக்கியமான வாக்கு வங்கியாக உள்ளவை. எனவே லோக்சபா தேர்தலில் இது கைகொடுக்கும் என்பதால்தான் இப்படி ஒரு அதிரடியை ஜெயலலிதா செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.

யார் யாருக்குப் பிரதிநிதித்துவம்?
வேட்பாளர்களில் சின்னத்துரை தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். முத்துக்கருப்பன் தேவர் சமுதாயத்தை் சேர்ந்தவர். விஜிலா சத்தியானந்த் நாடார் பிரிவைச் சேர்ந்தவர். சசிகலா புஷ்பா, பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ. கணக்கு பலிக்குமா
ஜெயலலிதாவின் இந்த அரசியல் ஜாதிக் கணக்கு எந்த அளவுக்கு அதிமுகவுக்குக் கை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நெல்லை, தூத்துக்குடி அதிமுகவினர் உற்சாகம்
நான்கு ராஜ்யசபா சீட்டுக்களையும் தங்களது மாவட்டத்துக்கே முதல்வர் ஜெயலலிதா கொடுத்திருப்பதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளதாகவும், பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications