Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. மீதான வருமான வரி வழக்கில் துறை வாரியாக பிரச்சனையை தீர்க்க அனுமதிக்க கூடாது: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Jayalalitha IT case Karunanidhi urges Central government
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில் துறைவாரியாக பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அனுமதித்தால் ஒரு தவறான முன்மாதிரியாக அது அமைந்துவிடும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வருமானவரி வழக்கில், துறை வாரியாக பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள ஜெயலலிதா புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய அரசும், பிரதமரும், குறிப்பாக வருமான வரித் துறையும் எச்சரிக்கையோடு இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்.

ஜெயலலிதா தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, துறைவாரியாக பிரச்னையை தீர்த்துக்கொள்ள அரசு முன்வந்தால், அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும்.

இது தவறு செய்வோரை ஊக்குவிப்பதாக ஆகிவிடும் என்பதை கவனத்தில் கொண்டு இப்பிரச்னையை மத்திய அரசு அணுக வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+