69வது சுதந்திர தினம்... கோட்டையில் கொடி ஏற்றுகிறார் முதல்வர் ஜெயலலிதா!
சென்னை: இந்தியாவின் 69-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா 15-ந் தேதி தேசிய கொடியேற்றி உரையாற்றுகிறார்.
தமிழக அரசின் சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள், புனித ஜார்ஜ் கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 15-ந் தேதியன்று அங்கு சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட உள்ளன.
கடந்த ஆண்டு காலை 9 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றினார். ஆனால் இந்த ஆண்டு கொடியேற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 15-ந் தேதி காலை 8.50 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றுகிறார். மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகு கொடியேற்றும் நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுதந்தர தின விழாவில் பங்கேற்பதற்காக போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து 15-ந் தேதி காலை காரில் புறப்படும் அவர், போர் நினைவுச் சின்னத்துக்கு வருவார். அங்கிருந்து மோட்டார் சைக்கிள் புடைசூழ ஜெயலலிதாவை ஜார்ஜ் கோட்டைக்கு காவல்துறையினர் அழைத்து வருவார்கள். அவரை தலைமைச் செயலாளர் வரவேற்பார்.
பின்னர் தலைமை முப்படை அதிகாரிகள், காவல் உயரதிகாரிகளை முதல்வருக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.
பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு வருவார் முதல்வர் ஜெயலலிதா. அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்வார்.
பின்னர் அவர் திறந்த ஜீப்பில் ஏறிச்சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார். அவருடன் அணிவகுப்பு தலைவர் உடன் செல்வார். அதைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்திற்கு ஜெயலலிதா சென்று, 8.50 மணிக்கு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வணக்கம் செலுத்துவார்.
முக்கிய அறிவிப்புகள்
அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதத்தை வாத்தியத்தில் இசைப்பார்கள். அதன் பின்னர் சுதந்திர தின உரையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிகழ்த்துவார். இந்த உரையில் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.
அதைத் தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை ஜெயலலிதா வழங்குகிறார். விருது பெற்றவர்களுடன் அவர் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் அருகே குழந்தைகளுக்கு ஜெயலலிதா இனிப்புகளை வழங்குவார்.
தற்போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் விருதுகளுக்கான நபர்களையும் அரசு தேர்வு செய்து வருகிறது.
சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள், புதிய அறிவிப்புகள் மற்றும் விருதுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் கலந்துகொண்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications