டிரம்பே வியந்த! பத்மஸ்ரீ விருது பெற்ற! தமிழக பாம்புபிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை!
செங்கல்பட்டு: பத்மஸ்ரீ விருது பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இரு பாம்புபிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பள்ளியில் வேலைக்கான ஆணையை ஆட்சியர் சினேகா நேற்றைய தினம் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சென்னேரி கிராமத்தில் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல், மாசி ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் விலங்குகள் நல பிரிவில் இந்த விருதைப் பெற்றார்கள்.

இவர்கள் இருவருமே அபாயகரமான அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்கள். உலகம் முழுவதும் பயணித்து பல்வேறு நாடுகளில் இருந்து விஷமுள்ள பாம்புகளை பிடித்துள்ளனர். இந்த நிலையில் வடிவேல் மகன் சுரேஷ், மாசி மகன் தங்கராசு ஆகியோருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப வண்டலூர் அருகேவுள்ள குமிழி அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் தோட்ட பராமரிப்பாளர், இரவு காவலர் பணிக்கான ஆணைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளியில் பணிபுரிவதற்கான நியமன ஆணையை ஆட்சியர் சினேகா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இரு பாம்பு பிடி வீரர்களுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் இருந்த போது அமெரிக்கர்களுக்குத்தான் முன்னுரிமை என இருந்தது. ஆனால் பாம்பு பிடி வீரர்களான தமிழகத்தைச் சேர்ந்த மாசி சடையன், வடிவேல் ஆகியோர் சென்றனர்.
அதாவது அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தில் அதிக மலைப்பாம்புகள் வாழும் பகுதி. இவை 2017ஆம் ஆண்டு மான், முயல்கள் உள்ளிட்ட விலங்குகளை விழுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். அப்போது அமெரிக்காவின் பாம்பு பிடி வல்லுநர்களைக் கொண்டு அந்த பாம்புகள் பிடிபட்டன. ஆனாலும் அவற்றின் தொல்லை அதிகரித்தது. இதனால் உலகெங்கும் இருக்கும் பாம்புபிடி வீரர்களைக் கண்டறிய புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் தனித் திட்டம் வகுத்தது.

அப்போதுதான் தமிழகத்தைச் சேர்ந்த மாசி சடையனும் வடிவேலும் அங்கு சென்று பாம்பு பிடித்தனர். இதற்காக இந்திய மதிப்பில் 56 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இவர்கள் இருவரும் 2 மாதம் வரை தங்கியிருந்து 33 மலைப்பாம்புகளை பிடித்தனர். ஒவ்வொரு பாம்பின் எடை 75 கிலோவாகும்.
அமெரிக்காவின் செய்தி நிறுவனமான மியாமி ஹெரால்டு உலகின் சிறந்த பாம்பு பிடிப்பாளர்கள் என புகழாரம் சூட்டியது. அது போல் இவர்கள் இருவரும் அமெரிக்கா மட்டுமில்லாமல் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று பாம்பு பிடித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications