கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை..நிர்வாகி, ஆசிரியைகளை 1 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கோர்ட் அனுமதி
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான 5 பேரை ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கர் உள்ளிட்ட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி க்கு அனுமதி வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.

ஆரம்பம் முதலே மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர். பள்ளி சார்பில் சரியான பதில் அளிக்காததால் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
பள்ளியில் உள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். சான்றிதழும் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். முன்னதாக மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை போலீசார் அடுத்தடுத்து கைது செயத்னர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 5 பேரும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கைதான பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
Recommended Video
அதன்படி, பள்ளி நிர்வாகிகள் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கர் உள்ளிட்ட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி க்கு அனுமதி வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications