ஊழல்வாதிகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை விட மோசமாக செய்வேன்.. கமல் எச்சரிக்கை #maiamwhistle #kh
ஊழல்வாதிகளை சினிமாவில் நான் செய்ததைவிட மோசமாக செய்வேன் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: தவறு செய்வோரை சினிமாவில் நான் செய்ததை விட மோசமாக செய்துவிடுவேன் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்தார்.
கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். தனது பிறந்த நாளையொட்டி சென்னை தி.நகரில் நற்பணி இயக்கம் சார்பில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் கமல்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் கமல் பதிலளிக்கையில், நேர்மை தவறுவோருக்கு எதிராக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவுள்ளோம்.
ஊழல் செய்தவர்கள் என் நற்பணி மன்றத்தில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சினிமாவில் ஊழல்வாதிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையைவிட மோசமாக இருக்கும்.
எந்த மதமானாலும் வன்முறை கூடவே கூடாது. இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. சமூகம் பார்த்து நான் எப்போதும் நட்பு கொண்டது கிடையாது என்றார் கமல்.