For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 பேர் விடுதலை: ஜெயலலிதா எடுத்திருப்பது துரித முடிவு அல்ல-கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை வாதித்த முதலமைச்சர் ஜெயலலிதா, 7 பேரையும் விடுதலை செய்வது என இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கூறினார்.

Karuna Welcomes TN govt Order on Rajiv Assassination Case

இதுகுறித்து சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி பதிலளித்தார்.

கேள்வி: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், அதனை மத்திய அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி: மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும். ஒப்புதல் அளிக்குமென்று நம்புகிறேன். அவர்களும் ஒப்புதல் அளித்து தூக்குத் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டால் நாம் மேலும் மகிழ்ச்சி அடையலாம்.

கேள்வி: தமிழக அரசு துரித முடிவு எடுத்திருப்பதாக கருதலாமா?

கருணாநிதி: இது துரித முடிவு அல்ல. 2011ம் ஆண்டிலேயே இந்தக் கருத்தினை நான் தெரிவித்தபோது அதை ஏற்காமல் ஏகடியம் பேசியவர் தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு அதே நிலையை அவர் எடுத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.

கேள்வி: தமிழக அரசே விடுவித்திருக்கலாமே; மத்திய அரசுக்கு அனுப்புவது அவசியமா?

கருணாநிதி: அது பற்றி விரிவாக முன்கூட்டியே யோசித்திருப்பார்களானால், இன்றைக்கே அவர்களை விடுதலை செய்திருக்கலாம். தாமதம் ஏற்படாது. தாமதமாக வந்தாலும் நாம் மகிழ்ச்சியடையக் கூடிய முடிவு ஏற்படுமேயானால் நல்லதுதானே!

தலைவர்கள் வரவேற்பு:

தமிழக அரசின் முடிவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன், நெடுமாறன், கி.வீரமணி உள்ளிட்டோரும் தமிழக அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

English summary
DMK President M Karunanidhi today welcomed to the Tamil Nadu government order release of Perarivalan, Murugan, Santhan and 7 person.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X