அறிஞர் அண்ணா என உச்சரித்த கருணாநிதி- துரைமுருகன் நெகிழ்ச்சி
அறிஞர் அண்ணாவின் பெயரை கருணாநிதி உச்சரித்தார் என்று துரைமுருகன் தெரிவித்தார்.
திருச்செங்கோடு: அறிஞர் அண்ணாவின் பெயரை கருணாநிதி உச்சரித்ததாக கருணாநிதி நெகிழ்ச்சி அடைந்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக வெளியே எங்கும் வருவதில்லை. கட்சி பணிகளிலும் ஈடுபடுவதில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முரசொலி அலுவலகத்துக்கு வந்த கருணாநிதி மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் ஒரு நாள் தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

தொண்டர்கள் மகிழ்ச்சி
அதன்பின்னர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற அவர் அங்கு வருகை பதிவேட்டில் மு.கருணாநிதி என்று கையெழுத்திட்டார். அவரது உடல் நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்டு தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிஐடி காலனிக்கு
கொள்ளு பெயருடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கோபாலபுரத்திலிருந்து சிஐடி காலனிக்கு சென்று வந்தார்.

பொருத்தப்பட்ட குழாய்
இதுகுறித்து திருச்செங்கோட்டில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில் கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை எடுத்துவிட்டு மருத்துவர்கள் அவருக்கு பேச்சு பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

உங்கள் பெயர் என்ன?
அவரது தொண்டை குழாயின் வெளிபக்கம் கருவி பொருத்தியதால் ஏற்பட்ட துளையை மூடிக் கொண்டு அவரை பேசுமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர். முதலில் உங்கள் பெயர் என்ன என்று கேட்டனர்.

யாரை பிடிக்கும் ?
அதற்கு அவர் மு.கருணாநிதி என்றார். உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு அவர் அறிஞர் அண்ணா என்று கூறினார் என்று துரைமுருகன் தெரிவித்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications