கொடநாடு கொலையில் தேடப்பட்ட சயானிடம் கேரள போலீசார் துருவித் துருவி கேள்வி.. மருத்துவமனையில் பரபரப்பு
கொடநாடு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சயானிடம் கேரள போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கொடநாடு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த சயானிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஜெயலலிதாவிற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டார். அப்போது கிஷன் பகதூர் என்ற மற்றொரு காவாளிக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதற்கிடையே, ஓம்பகதூர் கொலையில் தொடர்புடையதாகக் கூறி, ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ் தேடப்பட்டு வந்தார். அவர் மர்மான முறையில் இறந்தார். அவர் சாலை விபத்தில் பலியானதாக போலீசார் அறிவித்தனர்.

சாலை விபத்து
இதே போன்று கொடநாடு கொலையில் சம்பந்தப்பட்டதாக கேரளத்தைச் சேர்ந்த சயான் என்பவரும் தேடப்பட்டு வந்தார். அவரும் கார் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக சேர்க்கப்பட்டார்.

கண் திறந்த..
அதன் பின்னர் கண் திறந்த சயானிடம் தமிழக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதே போன்று கேரள போலீசாரும் சயானிடம் விசாரணை நடத்தினார்கள்.

மருத்துவமனை மாற்றம்
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சயான் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

மீண்டும் விசாரணை
இதனைத் தொடர்ந்து, கேரள போலீசார் சயானிடம் விசாரணை நடத்த கோவை அரசு மருத்துவமனைக்கு இன்று சென்றனர். அங்கு சயானிடம் மீண்டும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, சாலை விபத்து குறித்து கேள்விகளை கேட்டு குடைந்தெடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications