கொடநாடு கொலை வழக்கில் கைதான சயான் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதான சயானுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளா
கோவை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சயான், உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் கோடநாடு பங்களாவிற்குள் புகுந்த கும்பல் ஒன்று, ஓம்பகதூர் என்ற காவலாளியை கொலை செய்துவிட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கிய எஸ்டேட் பங்களாவில் குற்றச் செயல் நடந்தது தமிழகம் முழுக்க பெரிய அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

9 பேர் கைது
இந்த வழக்கு தொடர்பாக சயான், மனோஜ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் சயான் சாலை விபத்திற்குள்ளாகி நீண் நாட்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்.

கோவை சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட அவர், கைவலி காரணமாக 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், சயான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக சயான் கூறினார். இதனை அடுத்து அவரை பலத்த பாதுகாப்புடன் சிறைத்துறை அதிகாரிகள் மீண்டும், கோவை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதிகளுக்கான தனிப்பிரிவில் அனுமதித்தனர்.

மர்மம் நீடிப்பு
இந்த வழக்கில் சயான் கைது செய்யப்பட்டது முதல் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அடிக்கடி அனுமதிக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள் அதிமுகவில். முக்கிய குற்றவாளியான இவருக்கு சாலை விபத்து நடைபெற்றதில் இருந்து இன்று வரை மர்மங்கள் பல நீடித்தே வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications