கோவை ரயில் மறியல் போராட்டத்தில் தள்ளு முள்ளு... பெண்களை ஆண் போலீஸ் இழுத்துச் சென்ற கொடூரம்
கோவை: மத்திய அரசைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெண் போராட்டக்காரர்களை ஆண் போலீசாரே இழுத்துச் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இரண்டு நாள் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கங்கள் அறிவித்த இந்தப் போராட்டத்தில் பாஜக, அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும், சமூக இயக்கங்களும் கலந்து கொண்டு அந்தந்த மாவட்டங்களில் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று கோவையில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்த கோவை மாவட்ட மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் கோவையில் ஒன்று திரண்டனர். பின்னர், ஊர்வலமாக ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர்.
அப்போது, ரயில் நிலையத்திற்கு சற்று முன்பாக வந்த ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள், மேற்கொண்டு போராட்டக்காரர்கள் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு அரண்களை வைத்து தடுத்தனர். அதனைத் தாண்டி போராட்டக்காரர்கள் சென்று ரயில் மறியலில் ஈடுபடு முயன்ற போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாக்குவாதமும் நடைபெற்றது. மேலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை எல்லாம் ஆண் போலீசார் தர தரவென இழுத்துச் சென்ற கொடூரமும் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தால் அந்த இடமே ஒரு போராட்டக் களமாக மாறியது. இதனையடுத்து, போலீசார் அனைத்துக் கட்சித் தொண்டர்களை கைது ஒரு மண்டபத்தில் வைத்துள்ளனர்.
500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், போலீசாரின் அராஜகப் போக்கைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications