கோவில்பட்டியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 6 பேர் கைது
கோவில்பட்டி: கோவில்பட்டியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் ரூ 7 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவில்பட்டி பகுதியில் 500 ரூபாய் கள்ளநோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டு வருவதாக ஏ.எஸ்.பி முரளிராம்பாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏ.எஸ்.பி முரளிராம்பா உத்தரவின்பேரில் தனிப்பிரிவு போலீஸ் அமைக்கப்பட்டு கள்ள நோட்டு கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவில்பட்டி அண்ணா பஸ்நிலைய பகுதியில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ்நிலைய பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பேக்குகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் நெல்லை மாவட்டம் தென்காசி சுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்த அசன் , விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேல காந்திநகரைச் சேர்ந்த சதுரகிரி , திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த லூர்துசாமி என்பது தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் வைத்திருந்த பேக்குகளை போலீசார் சோதனை செய்தபோது, பேக்குகளுக்குள் ரூபாய் 500 கள்ளநோட்டு கட்டுகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் 3 பேரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மேலும் பலர் இந்த கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேர்கள் அளித்த தகவலின்பேரில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு வந்த கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்கநகரை சேர்ந்த மகேஷ்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 லட்சம் கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மந்தித்தோப்பில் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து கள்ளநோட்டுக்களை அச்சடிக்க பயன்படுத்திய கள்ள நோட்டுக்களை அச்சடிக்கும் மிஷின், பேப்பர்கள் போன்றவைகளையும் போலீசார் கைப்பற்றினர்.ரூபாய் 500 கட்டுகளை கொண்ட மொத்தம் ரூபாய் 7 லட்சத்து 23 ஆயிரம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications