வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி முதல் மதிப்பெண்ணை அள்ளிய சுசாந்தினி
கிருஷ்ணகிரி: என் பள்ளியானது கிருஷ்ணகிரியில் இருந்து தூரம் அதிகம் என்பதால், அங்கேயே வீடு எடுத்து தங்கி படித்தேன் என்று பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தினி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பிளஸ் 2 தேர்வில் 1193 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவி சுசாந்தினி.

தனது நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கும் மாணவி சுசாந்தினி செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலேயே முதலிடம் பெறுவதற்கு முயற்சி செய்தேன்.
ஆனால் 491 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. ஆனாலும் என் முயற்சியை நழுவ விடாமல் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினேன். இந்த வெற்றிக்கு நான் மட்டும் கஷ்டப்படவில்லை. என்னுடைய அப்பா, அம்மா, எங்க பாட்டி அடுத்து ரொம்ப முக்கியமானவங்க எங்க டீச்சர்கள். எல்லோரும் எனக்காக கஷ்டப்பட்டாங்க.
எல்லோருடைய கஷ்டத்திற்கும் பலன் கிடைத்துவிட்டது. நான் படிச்ச வித்யா மந்திர் ஸ்கூல் கிருஷ்ணகிரியில் இருந்து தூரம் அதிகம். அதனால அங்க ஒரு வீடு எடுத்து தங்கிதான் நான் படிச்சேன்.
என்னோட பாதுகாப்புக்கு எங்க பாட்டி இருந்தாங்க. அவங்களும் என்னோட இந்த வெற்றிக்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. அப்புற, எங்க டீச்சர்ஸ் என்னை ஒவ்வொரு விஷயத்திலும் ஊக்கபடுத்திக்கிட்டே இருந்தாங்க.
எங்கிட்ட எதாவது மைனஸ் பாயிண்ட் தெரிஞ்சா உடனே அதை சுட்டிக்காட்டி சரி செஞ்சுடுவாங்க. உன் கையெழுத்து நல்லா இருக்கு. உன் ப்ரசன்ட்டேஷன் நல்லா இருக்குன்னு ஒவ்வொரு விசயத்திலும் என்கரேஜ் பண்ணிகிட்டே இருப்பாங்க.
எங்க அப்பாவும், அம்மாவும் இதை பத்தாம் வகுப்பிலேயே எதிர்பார்த்தாங்க. அப்ப முடியல. ஆனா இப்ப அவுங்க ஆசைய நிறைவேத்திட்டேன். என்னுடைய லட்சியம் டாக்டராக வேண்டும் என்பதுதான். இந்த தருணத்தை என வாழ்க்கையில் மறக்க முடியாது" என்று மகிழ்ச்சியில் திளைத்தபடி கூறுகிறார் சுசாந்தினி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications