கும்பகோணம் தீவிபத்து – ஒரு நபர் ஆணையத்தின் முதல்கட்ட விசாரணை துவக்கம்
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் முதல்கட்ட விசாரணை கும்பகோணத்தில் நேற்று தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த கிருஷ்ணா பள்ளியில் 2004, ஜூலை 16 ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். மேலும், 18 குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தமிழக அரசு தலா ரூபாய் 1 லட்சம் வழங்கியது. கூடுதல் இழப்பீடு கோரி பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதில், மனுதாரர்கள் கோரும் இழப்பீட்டு தொகை தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர் 94 பேரும், காயமடைந்த 18 குழந்தைகளின் பெற்றோரும் கூடுதல் இழப்பீடு கோரும் மனுவை இந்த ஆணையத்திடம் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களின் மீது முதல் கட்டமாக, கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரிக்க ஆணையம் முடிவு செய்து, தீ விபத்தில் இறந்த மூன்று குழந்தைகளின் பெற்றோரான செல்வராஜ், அருள் சேவியர், மாடசாமி ஆகிய மூவருக்கும் சம்மன் அனுப்பியது.
கும்பகோணம் நீதிமன்றத்தில் சிறப்பு அறையில் ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான வெங்கட்ராமன் வெள்ளிக்கிழமை அந்த 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர் தமிழரசன் ஆஜரானார். அரசுத் தரப்பு வழக்குரைஞராக கோவிந்தராஜ் இருந்து குறுக்கீடு செய்து விசாரித்தார்.

பாதிக்கப்பட்ட பெற்றோர், தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடும், சம்பவம் நடந்த நாள் முதல் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நாள் வரை 9 சதவீத வட்டியும் சேர்த்து வழங்கிட வேண்டும் என்று ஆணையத்திடம் தெரிவித்தனர்.
விசாரணைக்கு பிறகு நீதிபதி வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம், "பள்ளி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த 94 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் காயமடைந்த 18 குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட 112 பேர் கூடுதல் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெற்றோரும், மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு அளித்தால் குறிப்பிட்ட கால அவகாசமான 6 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படும். வரும் 23 ஆம் தேதியன்று அடுத்த கட்ட விசாரணை 5 பெற்றோர்களிடம் இங்கேயே நடத்தப்படும்" என்றார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications