நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கையுள்ளவர்.. 'அண்ணாமலைக்கு' காங். குஷ்பு வாழ்த்து
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ரஜினிகாந்தின் அறிவிப்புகளுக்கு வாழ்த்துக்கள் என காங்கரிஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்டவர் ரஜினி எனவும் அவர் கூறியுள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கும், புது கட்சி அறிவிப்பிற்கும் பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் பலர் எதிராகவும், சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் குஷ்பு இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ஜனநாயகத்தின் மீதும் வளர்ச்சி மீதும் நம்பிக்கைகொண்ட ரஜினிக்கும் அவரின் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியம் பிரவேசம் சில கட்சிகளுக்கு திகிலையும், சில கட்சிகளுக்கு பலத்தை கூட்டியுள்ளதும் இந்த கலவையான விமர்சனங்களிலிருந்தே தெரியவருகிறது.
We know that Mr Rajnikanth believes in inclusive democracy and development. We wish him the all the best in his endeavours.. @INCIndia @INCTamilNadu
— khushbusundar (@khushsundar) December 31, 2017












Click it and Unblock the Notifications