மதுரை மருத்துவமனையில் மீண்டும் ஒரு குழந்தை கடத்தல்!
மதுரை: மதுரையில் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண்குழந்தை ஒன்றை பெண்மணி ஒருவர் நேற்று கடத்திச் சென்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மருத்துவமனை கண்காணிப்பு கேமரா மூலம் அப்பெண்மணியை சிலமணித்துளிகளிலேயே போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை அடுத்த உப்புகார்குடியைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்பவர் விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்து . கர்ப்பிணியான இவர் கடந்த 9 ஆம் தேதி பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் முத்துவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று காலை கருப்பசாமி வெளியில் சென்றுள்ளார். சாப்பிட்டுக் கொண்டிருந்த முத்து கை கழுவ வெளியில் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. மற்றவர்களுக்கும் குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை.
உடனடியாக மருத்துவமனைக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு குழந்தைகள் பலமுறை களவு போய் உள்ளன.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் குழந்தையைத் தேட ஆரம்பித்தனர்.
பிரசவ அறை கண்காணிப்பு கேமராவை சோதனை செய்த போது, அதில் ஒரு இளம்பெண் குழந்தையை தூக்கிச் செல்வது தெரிய வந்தது. உடனே அப்பெண்ணைத் தேட ஆரம்பித்தனர் போலீசார்.
இதில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சொக்கநாதபுத்தூரைச் சேர்ந்த விக்னேஷின் மனைவி முத்து என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது கடத்தலுக்கான காரணம் தெரிய வந்தது.
அதே நாளில் அவருக்கும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. மற்றொரு குழந்தை இன்குபேட்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டால் உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றுதான் குழந்தையைக் கடத்தியதாக கூறியுள்ளார்.
மதுரை மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications