மதுரை மருத்துவமனையில் மீண்டும் ஒரு குழந்தை கடத்தல்!
மதுரை: மதுரையில் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண்குழந்தை ஒன்றை பெண்மணி ஒருவர் நேற்று கடத்திச் சென்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மருத்துவமனை கண்காணிப்பு கேமரா மூலம் அப்பெண்மணியை சிலமணித்துளிகளிலேயே போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை அடுத்த உப்புகார்குடியைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்பவர் விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்து . கர்ப்பிணியான இவர் கடந்த 9 ஆம் தேதி பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் முத்துவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று காலை கருப்பசாமி வெளியில் சென்றுள்ளார். சாப்பிட்டுக் கொண்டிருந்த முத்து கை கழுவ வெளியில் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. மற்றவர்களுக்கும் குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை.
உடனடியாக மருத்துவமனைக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு குழந்தைகள் பலமுறை களவு போய் உள்ளன.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் குழந்தையைத் தேட ஆரம்பித்தனர்.
பிரசவ அறை கண்காணிப்பு கேமராவை சோதனை செய்த போது, அதில் ஒரு இளம்பெண் குழந்தையை தூக்கிச் செல்வது தெரிய வந்தது. உடனே அப்பெண்ணைத் தேட ஆரம்பித்தனர் போலீசார்.
இதில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சொக்கநாதபுத்தூரைச் சேர்ந்த விக்னேஷின் மனைவி முத்து என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது கடத்தலுக்கான காரணம் தெரிய வந்தது.
அதே நாளில் அவருக்கும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. மற்றொரு குழந்தை இன்குபேட்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டால் உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றுதான் குழந்தையைக் கடத்தியதாக கூறியுள்ளார்.
மதுரை மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications