மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மரியாதை!
சென்னை: மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் வீரவணக்க நாளாக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 25-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

சென்னை மூலக்கொத்தளம் மயானத்தில் உள்ள நடராசன், தாளமுத்து மற்றும் டாக்டர் தருமாம்பாள் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியன் தலைமையில் மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி, மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, சுதர்சனம் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும் விருகம்பாக்கத்தில் உள்ள அரங்கநாதன் நினைவிடத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சென்னை (தெற்கு) மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சட்டசபை முன்னாள் உறுப்பினர் செங்கைசிவம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மூலக்கொத்தளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
கருணாநிதியுடன் வீரபாண்டி ராஜா குடும்பத்தினர் சந்திப்பு
இதனிடையே தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னையில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா தமது குடும்பத்தினருடன் சந்தித்து பேசினார்.

அண்மையில் வீரபாண்டி ராஜாவின் மகள் கிருத்திகாவுக்கும் ஜெய்ரத்தினத்துக்கும் நடைபெற்ற திருமணத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்திருந்தார். மணமக்களுடன் வீரபாண்டி ராஜா குடும்பத்தினர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications