இன்று தான் நிம்மதியாக இருக்கிறது - மல்லையா கைதை கொண்டாடும் முன்னாள் ஊழியர்கள்
லண்டனில் தொழிலதிபர் விஜய் மல்லையா கைது செய்யப்பட்ட செய்தியை கிங்ஃபிஷர் நிறுவன முன்னாள் ஊழியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை : லண்டனில் ஸ்காட்லாண்டு யார்டு போலீசாரால் விஜய் மல்லையா கைது செய்யப்பட்ட செய்தி, கிங்ஃபிஷர் நிறுவன முன்னாள் ஊழியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
நீதி நிச்சயம் ஒரு நாள் வெல்லும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு 2017ம் ஆண்டு ஏப்ரல் 18 மறக்க முடியாத நாள். லண்டனில் தலைமறைவாகி ஓராண்டு ஆன நிலையில் இன்று அதிகாலையில் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி வெளியானஅடுத்த கனம் சில நிமிடங்கள் ஆச்சரியப்பட்டாலும், இந்த நடவடிக்கையை இன்முகத்தோடு கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் ஊழியர் ஒருவர் இந்த கைது நடவடிக்கை பற்றி கூறுகையில் : இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி. ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்திருப்பது உண்மை என்றால், நீதிக்கு முன் எந்த செல்வாக்கும் செல்லாது என்று நிரூபனம் ஆகியுள்ளது. விஜய் மல்லையா கைது செய்யப்பட்டதால் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த நன்மையும் இல்லை, ஆனால் அவரால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியர்கள், தங்களின் ஊதிய பாக்கிக்காக இன்றும் போராடும் நபர்களுக்கு இது நிச்சயம் நல்ல நாள்" என்று தெரிவித்தார்.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் ஊழியரான நரேந்திரநாத் விஜய் மல்லையா கூறுகையில், "எப்படியும் எங்களுக்கு எங்களுடைய ஊதிய பாக்கி கிடைக்காது என்றாலும், விஜய் மல்லையாவை கைது செய்து நாடு கடத்தி வழக்கை சந்திக்கச் செய்வதே மகிழ்ச்சியான செய்தி தான்"
"மல்லையா வழக்கை லலித்மோடி விவகாரம் போல காலம்கடத்தாமல் செயல்பட்ட இந்திய அரசுக்கு நன்றி, லண்டன் தனக்கு பாதுகாப்பான இடம் என மல்லையா நினைத்தார், ஆனால் இப்போது நீதி வென்றுள்ளது" என்று மகிழ்கிறார் நரேந்திர நாத்.
ஆனால் ஊழியர்களின் சந்தோஷம் நிலைக்காதவகையில் கைதான சில மணி நேரங்களிலேயே விஜய் மல்லையாவிற்கு ஜாமீன் கிடைத்துவிட்டதால் ஊழியர்களின் மகிழ்ச்சி சிறிது நேரத்தில் மாயமாகிவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications