உள்ளாட்சி தேர்தல் எப்போது? 30ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து 30ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பியது ஹைகோர்ட்.

தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது. எனவே, தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து 30ம் தேதிக்குள்
பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications