நாடாளுமன்றத் தேர்தல்: விஜயகாந்த், பிரேமலதா சென்னையில் போட்டியிட விருப்ப மனு
டெல்லி: ‘‘நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சென்னை தொகுதிகளில் போட்டியிட ஏராளமானோர் விருப்பமனு அளித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தே.மு.தி.க. வினர் 23.01.2014 வியாழக்கிழமை முதல் விருப்ப மனு கொடுக்கலாம்'' என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.
பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பிப்ரவரி 1-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

அதன்படி, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 23ம் தேதி காலை 11 மணிக்கு விருப்ப மனு வினியோகம் தொடங்கியது. தே.மு.தி.க. இளைஞர் அணி தலைவர் சுதீஷ் இதை தொடங்கி வைத்தார்.
விருப்ப மனுக்களை வாங்குவதற்காக காலையில் இருந்தே ஏராளமான தே.மு.தி.க.வினர் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். விண்ணப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் பொது தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் செலுத்தினார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள், செந்தாமரை கண்ணன், வி.என்.ராஜன், யுவராஜ், ஏ.எம்.காமராஜ் ஆகியோர் மனு கொடுத்தனர்.
பிரேமலதா தென் சென்னையில் போட்டியிட வேண்டும் என தென் சென்னை மாவட்ட அவைத்தலைவர் கே.எஸ்.மலர்மன்னன் மனு கொடுத்தார்.

இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் கள்ளக்குறிச்சி, வேலூர் தொகுதிகளில் போட்டியிட விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மனு கொடுத்தார்.
பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தே.மு.தி.க. வினர் 184 பேர் விருப்ப மனு கொடுத்தனர்.

தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள், சந்திரகுமார், நல்ல தம்பி, சி.எச்.சேகர், பாபு, முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications