நெருங்கும் லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் பரபரக்கும் தேர்தல் ஆணையம்
நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான பணிகளை கவனிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 14 துணை கலெக்டர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவங்கிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் முதல் கட்டமாக கலெக்டர்கள், எஸ்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது. இறுதி வாக்காளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிக்காக 14 துணை கலெக்டர்களையோ, சீனியர் தாசில்தார்களையோ நியமனம் செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் ஒவ்வொருக்கும் ஒரு பணி ஒதுக்கப்படுகிறது.
இவர்கள் வாக்கு பதிவு அலுவலர்கள், ஊழியர்கள், வாக்குச் சீட்டுகள், தேர்தல் பணிகளுக்காக திட்டமிடுதல், தேர்தல் ஆணையத்திற்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதை கண்காணித்தல், எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரம் மேலாண்மை, தேர்தல் கட்டுப்பாட்டு அறை அவசர உதவி, செலவு கணக்கை கவனித்தல், தேர்தல் நன்னடத்தை விதிகளை செயல்படுத்துதல், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு, வாக்குப் பதிவிற்கான பிற உபகரணங்கள் மேலாண்மை, வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் தேர்தல் பார்வையாளர்கள், வேட்பு மனு தாக்கல், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட 14 பணிகளையும் கவனிக்க துணை கலெக்டர் அந்தஸ்தில் வருவாய் துறையினர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் இல்லாத பட்சத்தில் ஊரக வளர்ச்சி துறையினரை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் இயங்கும் தேர்தர் பிரிவு, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications