வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: சென்னையில் திடீர் மழை…
சென்னை: சென்னையில் காலைமுதல் வெயில் கொளுத்திய நிலையில் மாலை 5 மணியளவில் பெய்த திடீர் மழை பெய்து பூமியை குளிரச் செய்தது. இதமாக வீசிய குளிர்காற்று சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையே மழைக்குக் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திங்கட்கிழமை இரவு இரண்டு மணிநேரம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

செவ்வாய், புதன்கிழமைகளில் மழைக்கு விடுமுறை விட்டிருந்த வானம் நேற்று லேசாக பெய்தது. ஆனாலும் மேக மூட்டத்துடன் இதமான காலநிலையே சென்னையில் காணப்பட்டது.
இதனிடையே இன்று காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் மாலை நேரத்தில் குளிர் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
காற்றழுத்த தாழ்வு நிலை
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஓடிஸா கடற்கரைக்கு அருகில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிப்பதால், வெள்ளிக்கிழமையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டை, மரக்காணம், திண்டிவனம், காட்டுமன்னார்கோயில், கூடலூர், கொள்ளிடம், மாதவரம் ஆகிய இடங்களில் மழை பெய்தது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications