முதல்வருக்கு கடிதம் எழுதினீர்களா..? என்ன கடிதம் எழுதினீர்களா..? நிருபர்களை தெறிக்கவிட்ட மதுசூதனன்
Recommended Video

சென்னை: அதிமுகவுக்கு ஒருபோதும் களங்கம் ஏற்படுத்த விரும்ப மாட்டேன் என்று அக்கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனிடம் தோல்வியடைந்தார்.
இந்த தோல்வி குறித்து ஆய்வு நடத்தவில்லை என்று குற்றம்சாட்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுசூதனன் கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சி ரகசியம்
இந்த நிலையில், இன்று நிருபர்களின் கேள்விகளுக்கு மதுசூதனன் அளித்த பதில்: ஆர்.கே.நகர் தோல்வி தொடர்பாக நான் கடிதம் எழுதியது கட்சியின் உள்விவகாரம். நான் கடிதம் கொடுத்தேனோ இல்லையோ , அது கட்சி ரகசியம். ஓபிஎஸ்சுக்கும், எடப்பாடிக்கும் மட்டுமே அது தெரியும். அதிமுகவுக்கு ஒருபோதும் களங்கம் ஏற்படுத்த நான் விரும்பமாட்டேன்.

கட்சியை உருவாக்கினேன்
அதிமுக கட்சி உருவானபோது, கருணாநிதியால் தண்டிக்கப்பட்டு நான் சிறையில் இருந்தேன். அதிமுக என்னால் உருவாக்கப்பட்ட கட்சி. நானும் எனது குருநாதர் மு.பாண்டியனும் இணைந்து உருவாக்கினோம். எனவே அதிமுக கட்சிக்கு களங்கம் ஏற்பட விடமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உள்குத்து காரணமா?
நீங்கள் அனுப்பிய கடிதத்தில், அமைச்சர் மற்றும் எம்.பி ஆகியோர் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளீர்களே என்ற நிருபர்கள் கேள்விக்கு, "நீங்க கடிதத்தை படிச்சீங்களா? கட்சி தலைமைக்கு அனுப்பிய கடிதம் உங்களுக்கு எப்படி கிடைத்திருக்கும்? அது சீக்ரெட். மீடியாக்களிடம் அதை சொல்லும் கடமை எனக்கு இல்லை, என்றார் மதுசூதனன்.

எடப்பாடியிடம் கேளுங்கள்
திமுகவும், டிடிவி தினகரனும் இணைந்து கொண்டுதான் உங்களுக்கு எதிராக செயல்பட்டனரா என்ற கேள்விக்கு, தோல்விக்கான காரணம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம்தான் கேட்க வேண்டும் என்று மதுசூதனன் தெரிவித்தார். கடைசிவரை கடிதம் எழுதினீர்களா என்ற நிருபர்களின் தொடர் கேள்விகளுக்கு, எழுதினேனோ இல்லையோ அது சீக்ரெட் என்று திரும்ப திரும்ப பதில் அளித்தார் மதுசூதனன்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications