மடிப்பாக்கத்தில் முழங்கால் அளவு வெள்ளம்.. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு
Recommended Video

சென்னை: சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வீட்டுக்கு வெளியே முழங்கால் அளவுக்கு தெருக்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் வீடுகளை விட்டு வர முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனராம்.
சென்னையிலும் புறநகர்களிலும் வட கிழக்குப் பருவ மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை ஒரே நாளில் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

இதில் சிக்கி பாதிப்புக்குள்ளாகியுள்ள நமது வாசகர்கள் தங்களது பாதிப்பு குறித்த தகவல்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில் நமது மடிப்பாக்கம் வாசகர் எம்.பாலமுருகன் நமக்கு அனுப்பி வைத்துள்ள தகவல்.

மடிப்பாக்கம் எல்ஐசி நகர் முதலாவது மெயின் ரோட்டில் வசித்து வருகிறேன். இங்கு தெருவில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று பிற்பகலிலிருந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது.

வீ்ட்டை விட்டு வெளியே போக முடியவில்லை. உரியவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர் பாலமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.













Click it and Unblock the Notifications