மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்துக்கு காரணம் ‘சதி‘.. பொன். ராதாகிருஷ்ணன் கண்டுபிடிப்பு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு காரணம் சதியே என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்துக்கு காரணம் சொன்ன பொன் ராதாகிருஷ்ணன்- வீடியோ
மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு காரணம் சதித்திட்டமே காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சதித்திட்டமே காரணம் என குற்றம்சாட்டினார்.

தீ விபத்திற்கான உண்மை காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பை வைத்து திமுக அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அமைச்சர்கள் அடிக்கடி சமாதிக்குப் போவதை நிறுத்திக்கொண்டால் ஜெயலலிதாவின் மாண்பு காக்கப்படும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications