மருந்துக்கடையடைப்பு போராட்டம்: மருந்து கிடைக்காமல் தவித்த மக்கள்
நெல்லை: ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதை கண்டித்து தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டன.
தமிழகத்தில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வது தொடங்கப்பட்டு வருகிறது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அகில இந்திய மருத்துவ வணிகர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. போராட்டத்தையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மருந்துக்கடைகள் மூடப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் ஆயிரம் மருந்துக் கடைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 400 கடைகளும், குமரி மாவட்டத்திலும் அதே அளவு கடைகளும் நள்ளிரவு முதல் அடைக்கப்பட்டன. இந்த போராட்டத்தில் மருந்துக் கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து சில நிர்வாகிகள் கூறுகையில்,
தென் மாவட்டங்களில் மருந்து விற்பனையாளர்கள் ஸ்டிரைக் முழு வீச்சில் நடந்தது. அனைவரும் கடைகளை அடைத்து முழு அளவில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆன்லைனில் மருந்துகளை வாங்கினால் அவற்றின் தரம் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. மேலும் அந்த மருந்து காலாவதியான மருந்தா என்பதையும் கண்டுபிடிக்க முடியாது. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகும். ஆனால் உள்ளூரிலேயே இந்த மருந்தை வாங்கினால் அது குறித்த விபரங்களை உடனடியாக பெற முடியும். மேலும் அருகிலேயே டாக்டர் இருப்பதால் அவர்களிடம் காண்பித்து மருந்து தரமானது தானா என்பதையும் கண்டறியலாம். ஆகவே இந்த ஆன்லைன் வாணிகத்தை உடனடியாக மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications