காஞ்சிபுரம் அருகே டிரைவரை தாக்கி மருந்து பெட்டிகளுடன் லாரி கடத்தல்.. மர்மநபர்கள் கைவரிசை
சுங்குவார்சத்திரத்தில் ஓட்டுநரை தாக்கி மினி லாரியை மர்மநபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
காஞ்சிபுரம்: ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு மருந்து பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மர்மநபர்களால் கடத்திச் செல்லப்பட்டது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியில் மலாடி பார்மசூட்டிக்கல் என்ற நிறுவனம் பல வருடமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சுவாச கேளாறு போன்ற வியாதிகளுக்கு மருந்து உற்பத்தி செய்து முகவர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

நேற்று மதியம் சென்னை ஆலந்தூரில் உள்ள அலுவலகத்திற்கு மினி கன்டெய்னர் மூலம் சரக்கு அனுப்பபட்டது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் துணையுடன் ஓட்டுநர் சேகர் லாரியை பாதுகாப்பாக ஓட்டி சென்றார்.
பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த லாரியை 6 பேர் கொண்ட கும்பல் மடக்கியது. அதிகாரிகள் சோதனையிடுவதற்காக நிறுத்துவதாக நினைத்த சேகர் லாரியை நிறுத்திய உடன் சட்டென வண்டியில் ஏறிய மர்ம நபர்கள் கத்தியை எடுத்து பாதுகாவலரை தாக்கியதில் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். அடுத்த வினாடியே மர்ம நபர்கள் லாரியை கடத்தி கொண்டு சென்றனர்.
பின்னர் சோகண்டி என்ற பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு அவர்கள் கொண்டுவந்த பொலீரோ காரில் மருந்து பொருட்களை ஏற்று கொண்டு தலைமறைவானர்கள். லாரியில் மலாடி நிறுவனத்தின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் 26 பேரல் மருந்துகள் கொள்ளை போனதாக ஓட்டுநர் சேகர் சுங்குவார்சத்திரமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐஜி. ஸ்ரீதர், டிஐஜி நஜ்மல் கோடா மற்றும் எஸ்பி சந்தோஷ்ஹிதாமணி ஆகியோர் மர்மநபர்களை குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications