தூக்கை ரத்து செய்ய கோரும் 14 பேரின் மனு மீது ஜன.2வது வாரத்தில் தீர்ப்பு- தலைமை நீதிபதி சதாசிவம்

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது:
சட்டத்தின் தற்போதைய வளர்ச்சி, மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்தும் இளம் வழக்கறிஞர்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். இன்றைய வழக்கறிஞர்கள் நாளைய நீதிபதிகள். எனவே வழக்கறிஞர்கள் சட்டம் பற்றி அனைத்து விவரங்களும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அண்மை காலங்களில் பலாத்கார வழக்கு குற்றவாளிகளுக்கு, சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை வழங்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. பலாத்கார வழக்கில் குற்றவாளிகள், ஏற்கனவே சிறையில் இருந்த காலங்களையே தண்டனையாக கருதி அவர்களை விடுவிக்கும் வழக்கம் உயர்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் உள்ளது.
ஆனால், அவ்வாறு குறைந்த தண்டனை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றங்கள் வழங்கவேண்டும்.
நாடு முழுவதும் 14 தூக்கு தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. அவை தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்காகும். இந்த 14 வழக்குகளும் விசாரணை முடிந்து, அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தீர்ப்புகள் வழங்கப்படும்.
பொதுவாக ஒரு கொடூர வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர் அனுப்பும் கருணை மனுவை ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள் பரிசீலிக்கும்போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்கிறார்கள். தண்டனையை குறைக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது.
அதே நேரம், கருணை மனுவை குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலித்து முடிக்க வேண்டும் என்ற காலநிர்ணயம் உத்தரவாக இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications