சென்னை மெட்ரோ ரயில் ஷெனாய்நகர் – திருமங்கலம் இடையே சுரங்கப்பணி நிறைவு!
சென்னை: சென்னையில் செஷனாய் நகர்- திருமங்கலம் இடையே சுரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரெயில் பணி 2007-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.14 ஆயிரத்து 600 கோடி திட்டமதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இதன் செலவு ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

மொத்தம் 45 கி.மீ
2 வழித்தடங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் பாதையின் மொத்த தூரம் 45 கிலோ மீட்டர்.

மார்ச்சில் ரயில் ஓடும்..
கோயம்பேடு-ஆலந்தூர் இடையே உயர்மட்ட ரயில் பாதை அமைக்கும் பணி முழுமை அடைந்துள்ளது. இதில் கடந்த சில மாதங்களாக பரிசோதனை ஓட்டம் நடைபெற்றது. வருகிற மார்ச் மாதம் இதில் போக்குவரத்து தொடங்குகிறது.

5 கட்ட பணி
சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணி 5 கட்டங்களாக நடந்து வருகிறது.

சுரங்கப் பணி நிறைவு
இதில் முதல் கட்டமாக ஷெனாய்நகர்- திருமங்கலம் இடையே சுரங்கம் தோண்டும் பணி நேற்று காலை 11.30 மணிக்கு நிறைவடைந்தது. திருமங்கலம் ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் எந்திரம் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வந்தது. அப்போது அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இயக்குனர் பேட்டி
பின்னர் சென்னை மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 5 கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஒன்றான ஷெனாய்நகர்- திருமங்கலம் இடையே 4 கி.மீ தூரம் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது.

2016-ல் மற்றொரு வழித்தடத்தில் ரயில்
இந்த சுரங்கப் பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இதன் இடையே அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர் ஆகிய ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. 2016-ல் இந்த பாதையில் ரயில்கள் ஓடத்தொடங்கும்.

அனைத்து வழித்தடத்திலும்..
ஆலந்தூர்-பரங்கிமலை- சின்னமலை-விமான நிலையம் வழிதடத்தில் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் ஓடும். 2017-ம் ஆண்டிற்குள் அனைத்து வழிதடத்திலும் மெட்ரோ ரயில் ஓடும்.
இவ்வாறு ராமநாதன் கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications