கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முக்கால் ஏக்கர் நிலம்.. அமைச்சர் பாண்டியராஜன் உறுதி
சென்னை: மதுரை கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொன் தமிழக நாகரீகம் தொடர்பான பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க முக்கால் ஏக்கர் நிலம் தரப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜன் உறுதியளித்துள்ளதாக தமிழறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.
மதுரை அருக உள்ளது கீழடி கிராமம். இங்கு சங்ககால தமிழர் வசிப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 4000 ஆண்டுகள் பழமையான தொல்லியல் பொருட்கள், பானை ஓட்டு எழுத்துகள் போன்றவை அங்கே கிடைத்து வருகின்றன. மத்திய அரசின் தொல்லியல் துறையினர் 1 ஏக்கர் பரப்பில் இதுவரை ஏறத்தாழ 5000 பொருட்களை எடுத்துள்ளனர்.

தமிழரின் தொன்மச் சான்றுகளாகவும், வரலாற்று அடையாளங்களாகவும் திகழும் அந்தப் பொருட்களை கர்நாடக மாநிலத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழர்களின் அரிய வரலாற்று ஆவணங்களாகத் திகழும் அந்தத் தொன்மச் சான்றுகளை, தமிழகத்தைத் தாண்டி, வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்றும், அவற்றை கீழடியிலேயே அருங்காட்சியம் அமைத்து, காட்சிக்கு வைக்கவேண்டும் என்றும் தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை எழுப்பிவருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியும் இதுதொடர்பாக தொடர்ந்து உரத்த குரல் எழுப்பி வருகிறார். இந்த நிலையில், தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலாளர் முனைவர் பா.இறையரசன் தலைமையில், வரலாற்று அறிஞர் கோ.கண்ணன், சாலினி, தொலைக்காட்சி செய்தேவன், நடிகரும் இயக்குநருமான யார் கண்ணன், இராசுகுமார் பழனிச்சாமி, ஆக்கம் மதிவாணன் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகம் சென்று, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் விசயராகவன், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் வெங்கடேசன் மற்றும் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரைச் சந்தித்து மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.
அப்போது கல்வியமைச்சர் மாபா.பாண்டியராசன், இது சரியான கோரிக்கை என்று வழிமொழிந்ததோடு, அருங்காட்சியகத்துக்கு அரசு சார்பில் முக்கால் ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் இக்குழுவினர் மத்திய அரசின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மகேசுவரியைச் சந்தித்தும், கீழடி கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆவன செய்வதாக மகேசுவரி உறுதியளித்தார்.
மாநில கல்வி அமைச்சர் அளித்த உறுதிமொழியின்படி இடம் கிடைத்தால் அங்கு அருங்காட்சியகம் அமைத்து சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையை உலகம் காலாகாலத்துக்கு அறிய வாய்ப்பு கிடைக்கும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications