அரசியல் என்பது முள்படுக்கை- கமல் சும்மா வெளியே நின்று பேசக் கூடாது... அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தபோது கமல் ரசிகர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் சுனாமி வந்தபோதும் , சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும் கமல் ரசிகர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில தினங்களாக நடிகர் கமலுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக கமல் தந்தி டிவியில் அமைச்சர்களின் நேர்மை குறித்து பேசினார்.

இந்நிலையில் கமலின் விமர்சனங்கள் குறித்து தமிழக நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது கமல் ரசிகர்கள் ஆற்றிய மக்கள் பணிகள் என்ன?.
அதேபோல் கடந்த 2015-இல் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அவரது ரசிகர்கள் என்ன செய்தார்கள்?. அரசியல் என்பது முள்படுக்கை, வெளியே இருந்து கொண்டு கமல் பேசக் கூடாது.
வரும் ஜனவரிக்குள்ளாவது கமல் அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும். போராட்டங்கள் பலவற்றை நடத்திதான் அரசியல் கட்சி தலைவர்கள் உருவாகியுள்ளனர். ஆனால் எந்தவித போராட்டமும் நடத்தாமல் கமல் அரசியல் தலைவராகிவிடலாம் என்றார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications