வர்த்தக பிரிவுக்கு டிராக்டர் மாற்றப்படாது.. ஸ்டாலினின் கடிதத்தை ஏற்று நிதின் கட்கரி உறுதி
வர்த்தக பிரிவுக்கு டிராக்டர் மாற்றப்படாது என்று மு.க.ஸ்டாலினின் கடிதத்தை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
சென்னை: விவசாய வாகன பிரிவிலிருந்து வர்த்தக பிரிவுக்கு டிராக்டர் மாற்றப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்கரி உறுதிப்பட தெரிவித்தார்.
விவசாய வாகன பிரிவில் உள்ள டிராக்டர்கள், வர்த்தக பிரிவுக்கு மாற்றப்படும் என்று கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதற்கு விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது போல் மாற்றக் கூடாது என்று அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் திருச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளின் காலில் விழுந்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் டிராக்டரை வர்த்தக பிரிவுக்கு மாற்றினால் ஜிஎஸ்டி வரி செலுத்த நேரிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
வர்த்தக பிரிவில் சேர்த்தால் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு அதன் விலை 10 முதல் 25 சதவீதம் வரை உயரக் கூடும். இதனால் உதிரிபாகங்களின் விலையும் உயரக் கூடும். ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் டிராக்டரை வர்த்தக பிரிவுக்கு மாற்றினால் மேலும் பாதிக்கப்படுவர்.
எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை திருச்சி சிவா எம்பி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கொடுத்தார். அதன் பேரில் விவசாய வாகன பிரிவில் இருந்து டிராக்டரை வர்த்தக பிரிவுக்கு மாற்றப்படாது என்று உறுதி அளித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications