ஆர்.கே.நகரில் லைட்டெல்லாம் "பளிச் பளிச்"ன்னு எரியும்.. சொல்வது நம்ம செல்லூர் ராஜூ!
ஆர்.கே.நகரில் லைட்டெல்லாம் "பளிச் பளிச்"ன்னு எரியும் என்று கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
சென்னை: இடைத் தேர்தல் நடைபெறப் போகும் ஆர்.கே.நகரில் பளிச் பளிச் என எரியும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருச்சியிலிருந்து டிடிவி தினகரன் பேட்டி அளித்தபோது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்சியின் கொடியை பயன்படுத்துவோம் என்றும் இரட்டை இலை சின்னம் குறித்து மேல் முறையீடு செய்வோம் என்றும் தாங்கள்தான் அதிமுக என்றும் திருச்சியில் தினகரன் பேட்டி அளித்திருந்தார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செல்லூர் ராஜூ கூறுகையில், அதிமுக ஒரு பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம்.
உலகிலேயே விஞ்ஞான ரீதியில் கல்வி ஊக்குவிக்க தமிழகத்தில்தான் மடிக்கணினி வழங்கப்படுகிறது. ஆர்.கே.நகரில் பளிச் பளிச் என எரியும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
அரசு செய்த நலத்திட்டங்களை கூறி ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்கு சேகரிப்போம் என்று செல்லூர் ராஜு கூறினார்.












Click it and Unblock the Notifications